Tuesday, March 17, 2009

பிரிவு

செல்லமே!

இன்று நமக்கு தலை தீபாவளி
புத்தாடை அணிந்து புன்னகையோடு
உன் கைப்பிடித்து மத்தாப்பு கொளுத்த
கோடி கோடியாய் என் நெஞ்சில் ஆசை
அனைத்தும் நிறைவேறியது இன்று என் கனவில்!
கலக்கமில்லை என் கண்ணனே

நான் உன்னை காணும் திருநாளே எனக்கு தீபாவளி
அன்று வெடிக்கும் ஆயிரம் மத்தாப்புக்கள் என் மனதில்

நாளைய நிஜத்தை நம்பி
இன்று நிழலாக உன்னுடன் தீபாவளி கொண்டாடும்
பிரியமுடன் உன் மனைவி!

1 comment:

  1. நிழல் நிஜமானதை எழுதுங்க :)

    ReplyDelete